ஸ்காபறோ சுகாதார வலையமைப்பு மற்றும் உள்ளுர் சமூகப் பங்காளிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்காபறோ தமிழ்ச் சமூகத்துக்கான சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி முகாம் ஏப்ரல் 7, புதன்கிழமை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7, புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரை ஸ்காபறோ கொன்வென்ஷன் சென்டரில் (20 Torham Place) இந்தத் தடுப்பூசி முகாம் செயற்படும்.
சிறப்புத் தடுப்பூசி முகாமில் மருத்துவர்கள் எலன் அம்பலவாணர், அருணா லம்போதரன், ராஜேஸ்வரி லோகநாதன், பொன் சிவாஜி, மயூரேந்திரா ரவிச்சந்திரன், மணிவண்ணன் செல்வநாதன், ஷிவானி ஸ்ரீதரன், கண்ணா வேலா ஆகியோர் சேவை வழங்குகின்றனர்.
' ஸ்காபறோவில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்டோர், நாட்பட்ட நோயுள்ள 50 வயதிற்கு மேற்பட்டோர் அல்லது ஸ்காபறோவைச் சேர்ந்த ஆரம்ப மருத்துவர், மதத் தலைவர்கள் இந்த விசேட தடுப்பூசி முகாமில் தடுப்பூசி பெறத் தகுதியானோராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முழுமையான தகுதிப் பட்டியல் மற்றும் விபரங்களை www.ScarbVaccine.ca என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும்.
சிறப்புத் தடுப்பூசி முகாமில் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களே உள்ளதால் இங்கு தடுப்பூசி பெற விரும்புவோர் www.bit.ly/3dqnryq என்ற இணைப்பில் சென்று தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, வதிவிட முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை வழங்கி தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா